Sep 7, 2011

படித்ததில் பிடித்தது - வாழ்தல் நிமித்தம்

எங்குபோய் வந்தாலும்

இப்போதும் நொறுக்குத்தீனி

வாங்கி வருகிறார் அப்பா

இவனுக்குப் பிடிக்குமென...


அருகிலேயே அமர்ந்து

பார்த்துப் பார்த்துப் பரிமாறுகிறாள் அம்மா


மடிகிடத்தி தலைகோதி

முன்னிரவில் கதைபேசும் மனைவி


'எங்கப்பா வந்திருக்கு

எங்கப்பா வந்திருக்கு'

தெருவெல்லாம்

தம்பட்டமடிக்கிறாள் குழந்தை..


நகரம் தங்கி சம்பாதித்து

ஊருக்கு போனால்

திரும்ப மனசில்லை.


வராமலிருக்கலாம்

விடுமுறைகள்.


இல்லாமலிருக்கலாம்

ஒரு சாண் வயிறும்!



No comments:

Post a Comment