Oct 6, 2011

Ninth day of Navarathiri - சரஸ்வதி


தேவியின் திருப்பாடல்களை வசந்தா ராகத்தில் பாடுவது உகந்தது.
பாடல்: மாணிக்க வீணையேந்தும்
ராகம்: மோகனம்

மாணிக்க வீணையேந்தும் மாதேவி கலைவாணி
தேந்தமிழ் சொல்லெடுத்துப் பாடவந்தோமம்மா
பாடவந்தோமம்மா பாட வந்தோம்
அருள்வாய் நீ இசை தர வா நீ - இங்கு
வருவாய் நீ லயம் தரும் வேணி அம்மா (மாணிக்க)

நாமணக்கப் பாடி நின்றால் ஞானம் வளர்ப்பாய்
பூமணக்க பூஜை செய்தால் பூவை நீ மகிழ்வாய் (மாணிக்க)

வெள்ளை தாமரையில் வீற்றிருப்பாய் - எங்கள்
உள்ளக் கோவிலிலே உறைந்து நிற்பாய்
கள்ளமில்லாமல் தொழும் அன்பருக்கே - என்றும்
அள்ளி அருளைத் தரும் அன்னையும் நீயே
வாணி சர‌ஸ்வதி மாதவி பார்கவி
வாகதீ‌ஸ்வரி மாலினி
காணும் பொருள்களில் தோன்றும் கலைமணி
வேண்டும் வரம் தரும் வேணி நீ
நான்முக நாயகி மோஹன ரூபிணி
நான்மறை போற்றும் தேவி நீ
வானவர்க்கினிதே தேனருள் சிந்தும்
கான மனோஹரி கல்யாணி (அருள்வாய்) (மாணிக்க)

Oct 5, 2011

Eighth day of Navarathiri - Sri Saraswathi



தேவியின் பாடல்களை புன்னாகவராளி ராகத்தில் பாடுதல் நலம்.

பாடல்: ஸ்ரீசக்ர ராஜ
ராகம்: செஞ்சுருட்டி

ஸ்ரீசக்ர ராஜ சிம்மாசனே‌ஸ்வரி
ஸ்ரீலலிதாம்பிகையே புவனே‌ஸ்வரி
ஆகம வேத கலாமய ரூபிணி
அகில சராசர ஜனனி நாராயணி
நாக கங்கண நடராஜ மனோஹரி
ஞான வித்யேஷ்வரி ராஜராஜே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: புன்னாகவராளி

பலவிதமாய் உன்னைப் பாடவும் ஆடவும்
பாடிக் கொண்டாடும் அன்பர் பத மலர் சூடவும்
உலகம் முழுதும் என் அகமுறக் காணவும்
ஒரு நிலை தருவாய் காஞ்சி காமேஷ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: நாதனாமக்ரியை

உழன்று திரிந்த என்னை உத்தமனாக்கி வைத்தாய்
உயரிய பெரியோர்கள் ஒன்றிடக் கூட்டி வைத்தாய்
நிழலெனத் தொடர்ந்த முன்னாள் கொடுமையை நீங்கச் செய்தாய்
நித்ய கல்யாணி பவானி பத்மேஷ்வரி (ஸ்ரீசக்ர)

ராகம்: சிந்து பைரவி

துன்பப் புடத்திலிட்டு தூயவனாக்கி வைத்தாய்
தொடர்ந்த முன் மாயை நீக்கி பிறந்த பயனைத் தந்தாய்
அன்பைப் புகட்டி உந்தன் ஆடலைக் காணச் செய்தாய்
அடைக்கலம் நீயே அம்மா அகிலாண்டே‌ஸ்வரி (ஸ்ரீசக்ர)

Oct 4, 2011

Seventh day of Navarathiri - Saraswathi


தேவியைப் போற்றிப் பாடும் பாடல்களை பிலஹரி ராகத்தில் பாடுவது சிறப்பு.

பாடல்: ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி
வரிகள்: கானம் கிருஷ்ண ஐயர்
ராகம்: ரதிபதிப்ரியா
தாளம்: ஆதி

ஜகத் ஜனனி சுகபாணி கல்யாணி (ஜகத்)
சுக ‌ஸ்வரூபிணி மதுர வாணி
சொக்கனாதர் மனம் மகிழும் மீனாக்ஷி (ஜகத்)

பாண்டிய குமாரி பவானி அம்பா சிவ
பஞ்சமி பரமேஷ்வரி
வேண்டும் வரம் தர இன்னும் மனமில்லையோ
வேத வேதாந்த நாத ‌ஸ்வரூபிணி (ஜகத்)

Oct 3, 2011

Sixth day of Navarathiri - Lakshmi

தேவியைப் பற்றிய பாடல்களை நீலாம்பரி ராகத்தில் பாடுவது சிறப்பு.
பாடல்: தேவி நீயே துணை
வரிகள்: பாபனாசம் சிவன்
ராகம்: கீரவாணி
தாளம்: ஆதி

தேவி நீயே துணை

தென்மதுரை வாழ் மீனலோசனி (தேவி)
தேவாதி தேவன் சுந்தரேசன்
சித்தம் கவர் புவன சுந்தரி அம்பா (தேவி)

மலையத்வஜன் மாதவமே - காஞ்சன
மாலை புதல்வி மஹாராக்னி
அலைமகள் கலைமகள் பணி கீர்வாணி
அமுதனைய இனிய முத்தமிழ் வளர்த்த (தேவி)

Oct 2, 2011

Fifth day of Navarathiri - Sri Lakshmi

இன்று பாட வேண்டிய பாடல்

உலகளந்த திருமாலின் வலமார்பில் உறைபவளே
உலகமெலாம் காத்து நிற்கும் தேவி மகாலட்சுமியே
உலகெங்கும் ஆட்சி செய்யும் அஷ்டலட்சுமியே
உன்பாதம் சரணடைந்தோம் நலம் தருவாய் அம்மா!