Aug 4, 2010

நட்பு பிரிவதில்லை

நட்பு பிரிவதில்லை
பிரிந்தால் தானே...

தூரத்தேப் போனாலும்
தூர்வாரும் நினைவுகொண்டு
ஆழமிடும் அன்பினை
அலை அலையா எண்ணங்கள்
தினம் தினம்
மனதில் ரீங்காரமிடும்....

சண்டையிட்ட நாட்களை
சத்தமின்றி சிந்தித்து
மனதிற்குள் சிரித்து
வெளியில் சத்தம் வரும்...

மௌனமாய் மொழிகள் பேசி
மௌன கீதங்கள் பாடும்....

சிரித்த நக்கல் பேச்சு
கும்மாளமிட்ட கேலி பேச்சு
கிண்டலாய் போன நொடிகள்
சினம் வந்த வேளைகள்
சிக்கலிலும் இடியாப்பச் சிக்கல்கள்
அப்பப்பா சிரித்தே விரட்டிய நேரங்கள்..
எல்லாம் சேர்ந்து வரும்


பிரிவே தெரியாது
பிரிந்தால் தானே.

வேகமாக ஓடிவா
நிழலோடு ரசித்ததை..
நிஜத்தோடு பகிர

--- எங்கோ படித்தது

No comments:

Post a Comment